Published : 20 Sep 2015 10:06 AM
Last Updated : 20 Sep 2015 10:06 AM
இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள் ளது. இந்த புதியமுறை, இன்று முதல் அமலாகிறது.
“கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகாலை 12.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை, 12.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறை 20-ம் தேதி முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT