Published : 29 Nov 2014 03:57 PM
Last Updated : 29 Nov 2014 03:57 PM
காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதால் இங்கு இணைந்துள்ளேன். ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார்.
அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
குஷ்பு கூறியதாவது: "காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதால் இங்கு இணைந்துள்ளேன். ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும். எனக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு தெரியும். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். சாதி மத பேதமின்றி சேவை செய்ய காங்கிரசால் மட்டுமே முடியும். காங்கிரஸ் என்றுமே இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சி இனி மூப்பனாரை முன்நிறுத்தாது என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT