Published : 31 Jan 2017 08:00 AM
Last Updated : 31 Jan 2017 08:00 AM

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு: முதல்வர் தொடங்கிவைக்க விழாக் குழுவினர் அழைப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதியும், பாலமேட்டில் 9-ம் தேதியும், அலங்காநல்லூரில் 10-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வரை நேற்று சந்தித்த பிறகு விழாக் குழுவினர் அறிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடை நீக்கப்பட்டவுடன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள், ஊர் கூட்டம் நடத்தி பிப்ரவரி 1-ம் தேதி அலங்கா நல்லூரிலும், 2-ம் தேதி பால மேட்டிலும், 5-ம் தேதி அவனி யாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானம் நிறை வேற்றினர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அலங்கா நல்லூர் விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன், பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, “தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், விழா கமிட்டி இணைந்து இந்த ஜல்லிக்கட்டை நடத்த உள்ளதால், புதிய தேதி முதல்வரை சந்தித்தபின் அறிவிக்கப்படும்” என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவர் ஜே.சுந்தரராஜன், அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவர் ஏ.கே.கண்ணன், பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவர் கா.பா.செல்லதுரை உள்ளிட்ட விழாக் குழுவினர் நேற்று தலைமைச் செயல கத்தில் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

சந்திப்பிக்குப் பிறகு அவனியாபுரம் விழாக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் இனிமேல் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் விருப்பப்படி தேதிகளை அறிவித்து ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ளலாம் என்றும் முதல்வர் தெரிவித்தார். எனவே, அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

அலங்காநல்லூர் விழாக் குழுவினர் கூறும்போது, “ஜல்லிக்கட்டுக்காக உலகம் முழுவதும் போராடிய மாண வர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாது காப்பை அதிகரிப்பதற்காகவே ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, அலங்காநல்லூரில் பிப்ரவரி 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்காக, மாடுபிடி வீரர்களுக்கான பதிவு பிப்ரவரி 6-ம் தேதியும், காளைகளின் உரிமையாளர்களுக்கான பதிவு பிப்ரவரி 7-ம் தேதியும் நடை பெறும். இந்தப் போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம், அவரும் கண்டிப்பாக பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், போட்டியை காண வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு செய்யப்படும்” என்றனர்.

இதேபோல, பால மேட்டில் பிப்ரவரி 9-ம் தேதி ஜல்லிக்கட்டு நடை பெறும் என அப்பகுதி விழாக்குழுவினர் தெரிவித் தனர்.

சசிகலாவுடன் சந்திப்பு

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைக்க வர வேண்டும் என விழாக் குழுவினர் அவருக்கு அழைப்பு விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x