Published : 03 Jul 2017 09:24 AM
Last Updated : 03 Jul 2017 09:24 AM

அருவியில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி

கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி காமராஜர்புரம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 16 பேர் நேற்று குற்றாலம் சென்றுள்ளனர். அங்கு உள்ள அருவிகளில் குளித்துவிட்டு, கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவிக்குச் சென்றுள்ளனர்.

கும்பாவுருட்டி அருவி தடா கத்தில் குளித்தபோது, காமராஜர் புரம் தாளமுத்து நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ராமச்சந்திரன்(31), முல்லக் காடு கீழத்தெருவைச் சேர்ந்த சக்தி வேல் என்பவரின் மகன் இசக்கி முத்து(25) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x