Published : 22 Mar 2017 05:17 PM
Last Updated : 22 Mar 2017 05:17 PM

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வரும் 28-ம் தேதி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வரும் 28-ம் தேதி வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஓய்வூதியத் தொகை முறையாக வழங்கப்படவில்லை எனக்கூறி, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.

தற்போது அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வரும் 28-ம் தேதி வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x