Published : 16 May 2016 12:01 PM
Last Updated : 16 May 2016 12:01 PM

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணம் விநியோகம்: இளங்கோவன் குற்றச்சாட்டு

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை ஈரோட்டில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பணப்புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் 2 தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்திருக்கிறார்கள்.

அதிமுக பொறுத்தவரையில் எல்லா தொகுதிகளிலும் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதை தேர்தல் கமிஷன் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தது நிரூபணமால், வெற்றி பெற்றாலும் அவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x