Published : 16 May 2016 12:02 PM
Last Updated : 16 May 2016 12:02 PM

அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: குஷ்பு

அதிமுகவினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை மந்தைவெளியில் குஷ்பு வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில், ''தேர்தல் தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தல் மூலம் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x