Published : 11 Jul 2019 03:25 PM
Last Updated : 11 Jul 2019 03:25 PM

செமிபைனலில் பிஞ்ச் கோல்டன் டக்; பவுன்சரில் வார்னர் காலி: இங்கிலாந்து அபாரத் தொடக்கம்

பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 2வது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த ஆஸ்திரேலியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

 

ஏரோன் பிஞ்ச் செமிபைனலில் தான் எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சரின் முதல் பந்திலேயே இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார். 3வது நடுவரிடம் முறையீடு செய்தார், ஆனால் அங்கும் அவருக்கு ரிலீஃப் கிடைக்கவில்லை, கோல்டன் டக் அவுட் ஆனார் கேப்டன் ஏரோன் பிஞ்ச்.

 

இம்மாதிரி தருணங்களில் ஒரு முனையை இழுத்துப் பிடிக்க ஆஸ்திரேலிய அணியில் அவர்கள் மட்டம்தட்டிக் கொண்டேயிருக்கும் உஸ்மான் கவாஜா இல்லை, அவரை காயத்திற்கு இழந்தது ஆஸ்திரேலியா, அவருக்குப் பதில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் இறங்கியுள்ளார்.

 

டேவிட் வார்னர் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் ஓவர் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று கடுமையாக எகிறி குறுக்காகச் செல்ல வார்னர் தன் நிலையில் ‘ஸ்கொயர்’ ஆனார். மட்டையைக் கொண்டு தடுக்க முயன்றார் எட்ஜ் ஆனது ஜானி பேர்ஸ்டோ ஷார்ப்பான ஒரு கேட்சை எடுத்தார்.

 

தற்போது ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 3 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x