Last Updated : 11 Jul, 2019 03:30 PM

 

Published : 11 Jul 2019 03:30 PM
Last Updated : 11 Jul 2019 03:30 PM

தோனி ஓய்வு பெறப்போகிறாரா?- வியப்புடன் கேட்ட கோலி

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா, அப்படி ஏதும் எங்களுக்கு தெரியாதே என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையி்ல் தோனியும், ரவிந்திர ஜடேஜாவும் ஆடிய இன்னிங்ஸ் சிறப்புக்குறியது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலியிடம் நிருபர்கள் உரையாடினர். அப்போது இந்த உலகக் கோப்பைப் போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகிறது, தோனியின் எதிர்காலத் திட்டம் என்னவாக இருக்கும் என்று கோலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கோலி பதில் அளிக்கையில், " அப்படியா, தோனி ஓய்வு பெறப்போகிறாரா. இப்போதுவரை எங்களிடம் இதுகுறித்து மகிபாய்(தோனி) ஏதும் சொல்லவில்லையே

தோனி பேட்டிங்கில் ஒருமுனையில் நிதானமாக ஆடிவிட்டு, ஜடேஜாவை அடித்து விளையாட வாய்ப்புகொடுத்தார். ஜடேஜாவும் சரியான திசையில் ஆடினார். ஜடேஜாவுக்கு அணியில் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட பணியை அவர் சரியாகச் செய்துள்ளார். அந்த இக்கட்டான சூழலில் இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.

யாரையும் வெளியில் இருந்து எளிதாக குறைசொல்வி விடலாம், விமர்சிக்கலாம். நாங்கள் தவறு செய்தோம் என்பதை மறுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x