Published : 11 Jul 2019 01:06 PM
Last Updated : 11 Jul 2019 01:06 PM
எனது கடைசி மூச்சு இருக்குவரை சிறப்பான ஆட்டத்தை அளிப்பேன் என்று ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.
மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்னில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில், நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதில் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக அவுட் ஆன நிலையில் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள். மூத்த வீரர்கள் என அனைவரும் ஜடேஜாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து நன்றி தெரிவித்து ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த விளையாட்டு நான் ஒவ்வொரு முறையும் கீழே விழும்போது முயற்சியை கைவிடாமல் மீண்டும் சிறப்பாக எழ கற்று தந்திருக்கிறது. எனக்கு உத்வேகம் அளித்த ஒவ்வொரு ரசிகருக்கு நன்றி மட்டுமே போதுமானது இல்லை. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.
எனக்கு தொடர்ந்து உத்வேகம் அளியுங்கள். எனது கடைசி மூச்சு வரையும் சிறப்பான ஆட்டத்தை அளிபேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT