Published : 25 Jun 2019 03:10 PM
Last Updated : 25 Jun 2019 03:10 PM

மும்பையில் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி

மே.இ.தீவுகளின் ஸ்டார் முன்னாள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

செவ்வாய் மதியம் 12.30 மணியளவில் அவர் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை அதிகாரிகள் இது தொடர்பாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாத நிலையில் பிரையன் லாராவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மருத்துவமனையில் உடனடியாக லாராவுக்கு சிலபல பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

 

லாரா தங்கியிருந்த விடுதிக்கு அருகில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x