Published : 15 May 2019 08:09 AM
Last Updated : 15 May 2019 08:09 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு நேற்று முன்தினம் இரவு மும்பை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஹைதராபாதில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலை வழியாக 6 கிலோ மீட்டர் தூரத்தை திறந்தவெளி பஸ்ஸில் மும்பை வீரர்கள் வெற்றி உலா வந்தனர். வழி முழுவதும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் வீரர்கள் நனைந்தனர்.
திறந்தவெளி பஸ்ஸில் வீரர்கள் வந்ததால் பஸ்ஸுக்கு முன்பாக வந்த ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வழிநெடுக திரளாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மும்பை வீரர்களை நோக்கி உற்சாக குரல் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT