Last Updated : 15 May, 2019 12:00 AM

 

Published : 15 May 2019 12:00 AM
Last Updated : 15 May 2019 12:00 AM

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்: அஸாருதீன் நம்பிக்கை

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹைதராபாதில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இந்திய அணிக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணி நல்ல ஃபார்மில் உள்ளது. திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர். நல்ல பேட்ஸ்மேன்கள், உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வளவு திறமையுள்ள இந்திய அணி வெற்றி பெறாவிட்டால்தான் எனக்கு ஏமாற்றம் ஏற்படும். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா போன்றோர் உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இந்தியாவுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம். அதற்குப் பிறகு 2-வதாக இங்கிலாந்துக்கும், மூன்றாவதாக ஆஸ்திரேலியாவுக்கும் வாய்ப்புள்ளது. கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரியும். சில போட்டிகளில் சிறப்பான அணி படுதோல்வியைச் சந்தித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நமது அணி சிறப்பாக செயல்படும் என நினைக்கிறேன்” என்றார்.

இந்திய அணி உலகக் கோப்பை யில் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 5-ம் தேதி சந்திக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x