Last Updated : 02 May, 2019 09:00 AM

 

Published : 02 May 2019 09:00 AM
Last Updated : 02 May 2019 09:00 AM

80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய சிஎஸ்கே

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தும், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியும் சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இந்த ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத் தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

முன்னதாக டாஸை வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷிரேயஸ் ஐயர், சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளெசி ஸும், ஷேன் வாட்சனும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடினர். வாட்சன் 9 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் சுசித் பந்தில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு அதிரடியாக விளையாடியது.

பவர்பிளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகும் சென்னை அணியின் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. 10 ஓவர் களில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்களைச் சேர்த்திருந்தது.

ஆட்டத்தின் 14-வது ஓவரில் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கேப்டன் தோனி களம்  புகுந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரெய்னா 15-வது ஓவரில் அரை சத மடித்தார். அரை சதம் அடித்த உற்சாகத்தில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.அவர் 37 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். 

பின்னர் தோனியுடன், ஜடேஜா இணைந் தார். கடைசி ஓவர்களில் ஜடேஜாவும், தோனியும் அதிரடியாக விளையாடினர். 19-வது ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 25 ரன்களைக் குவித்தார். பின்னர் தோனியுடன் இணைந்தார் அம் பாதி ராயுடு. 19-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும், ராயுடு ஒரு பவுண்டரியும் விளாசினர். கடைசி ஓவரில் தோனி 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் தோனி, 22 பந்துகளில் 44 ரன்களும், ராயுடு 2 பந்துகளில் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளை யாடத் தொடங்கியது.

பிருத்வி ஷாவும், ஷிகர் தவணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி னர். இதில் பிருத்வி ஷாவை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார் தீபக் ஷகார்.

அதன் பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ஷிரேயஸ் ஐயர் மட்டுமே நிலைத்து ஆடினார்.

ரிஷப் பந்த் 5, காலின் இங்கிராம் 1, அக்சர் பட்டேல் 9, ஷெர்பான் ருதர்போர்ட் 2, கிறிஸ் மோரிஸ் 0, ஜெகதீஷா சுசித் 6, அமித் மிஸ்ரா 8 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.ஷிரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார்.

சென்னை அணி தரப்பில் இம்ரன் தகிர் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் ஷகார், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x