Published : 20 Feb 2019 12:35 PM
Last Updated : 20 Feb 2019 12:35 PM

‘கொல காண்டுல வர்றோம்’ -  ‘பேட்ட’ பாணியில் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹீர் உற்சாக ட்வீட்

12வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்குகின்றன. இதற்கான முதற்கட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.

 

இதில் முதல் போட்டியில் கடந்த ஐபிஎல் சாம்பியன் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

 

இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் தென் ஆப்பிரிக்க லெக்ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் ‘தங்லிஷில்’  ட்வீட் செய்த போது பேட்ட பட வசன பாணியில் குறிப்பிட்டு சிஎஸ்கேவுக்கு உற்சாகமூட்டியுள்ளார்.

 

அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

 

என் இனிய தமிழ் மக்களே நலமா? களம் இறங்குகிறோம் மார்ச் 23 நமது கோட்டையில். வந்தோம் வென்றோம் சென்றோம், வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷம் எங்க காளியோட ஆட்டத்தைப் பார்ப்பீங்க. கொல காண்டுல வரோம், செண்டிமெண்ட் இருக்கறவன் குறுக்க வராதீங்க...எடுடா வண்டிய... போடுடா விசில... என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x