Published : 09 Jan 2019 10:22 AM
Last Updated : 09 Jan 2019 10:22 AM

இலங்கை அணி ஒயிட்வாஷ்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

நியூஸிலாந்து - இலங்கை அணி கள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் 131 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 137 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 80 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்களும் விளாசினர்.

கேப்டன் கேன் வில்லியம்சன் 55 ரன்கள் சேர்த்தார். இலங்கை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 365 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக திசாரா பெரேரா 80, நிரோஷன் திக்வெலா 46, குசால் பெரேரா 43 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் பெர்குசன் 4, இஷ் சோதி 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என இழந்திருந்த இலங்கை அணி தற்போது ஒருநாள் போட்டித் தொடரில் ஒயிட்வாஷ் பெற்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத் தின் கடைசியாக வரும் 11-ம் தேதி நியூஸிலாந்து அணியுடன் டி 20 ஆட்டத்தில் மோதுகிறது இலங்கை அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x