Published : 01 Jan 2019 12:27 PM
Last Updated : 01 Jan 2019 12:27 PM

தந்தையான ரோஹித் சர்மா: ரோஹித் - ரித்திகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு டிசம்பர் 30-ம் தேதி மும்பையில் பெண் குழந்தை பிறந்தது.

இந்தத் தகவலை ரித்திகாவின் உறவினரான சீமா கானும், பிசிசிஐயும் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து பிசிசிஐயின் ட்விட்டர் பதிவில், ''வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள ரோஹித்துக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ரோஹித்துக்கும் ரித்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக மைக்கேல் க்ளார்க் உடனான பேட்டியின்போது ரோஹித் சர்மா, ''தந்தையாகும் தருணத்துக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நம் வாழ்க்கையையே மாற்றும் பொழுது அது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிசிசிஐ, ''சிட்னியில் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெறமாட்டார் என்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் ஜனவரி 8-ம் தேதி இணைவார்'' என்று தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x