Last Updated : 16 Oct, 2018 08:10 AM

 

Published : 16 Oct 2018 08:10 AM
Last Updated : 16 Oct 2018 08:10 AM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியை ஜீரணிப்பது கடினம்: மேற்கிந்தியத் தீவு அணியின் கேப்டன் பேட்டி

இந்தியாவுடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந் ததை ஜீரணிக்க முடியவில்லை என்று மேற்கிந்தியத் தீவு அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்தார்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. தொடரில் அடைந்த தோல்விக்குப் பிறகு ஜேசன் ஹோல்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தத் தொடரில் எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது. இந்தத் தோல்வியை ஜீரணிப்பது என்பதே கடினமாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதை ஏற்றுக் கொள் வது மிகவும் கடினம். ஏன் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள முயன்று வருகிறேன்.

இந்தத் தோல்விக்கு அனைத்து மேற்கிந்தியத் தீவு அணி வீரர் களுமே பொறுப்பு. வெற்றி காண் பதற்கான வழிகளை நாங்கள் தேடினோம். ஆனால் அதற்கான தீர்வு எங்களுக்குக் கிடைக்க வில்லை. இந்தத் தொடரின்போது ரோஸ்டன் சேஸ், ஷெர்மான் லீவிஸ் ஆகியோர் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தினர்.

இது ஒரு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பல தொடர் களில் சிறப்பாக விளையாடி நல்ல வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் இந்திய அணியானது தரவரிசை யில் முதலிடத்தில் இருக்கும் அணி யாகும். அந்த அணிக்கு ஈடு கொடுத்து நாங்கள் விளையாட வில்லை. இந்திய வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அவர்களுக்கு சொந்த மைதானம் என்றாலும் அவர்களது ஆட்டத்திறன் அபாரம்.

அதிக அளவு ரன்களைக் குவிக்க முடியவில்லை. சீரான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தாததால் தோல்வி கண்டோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x