Published : 22 Sep 2018 08:56 AM
Last Updated : 22 Sep 2018 08:56 AM
துபாயில் நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்று போட்டியில் தோனி தன் கேப்டன்சி அனுபவத்தின் மூலம் ரோஹித் சர்மாவுக்கு முக்கியக் கட்டத்தில் உதவினார்.
வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 31/2 என்று தடுமாறியது. அப்போது 10வது ஓவரில் நேற்றைய ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜாவை ரோஹித் சர்மா பந்து வீச அழைத்தார்.
ஷாகிப் அல் ஹசன் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆடிவந்த நிலையில் இவரும் முஷ்பிகுர் ரஹீமும் ஜோடி சேர்ந்தால் வங்கதேசத்துக்கு அது பெரிய அனுகூலம் என்று இந்திய அணியினர் அறிந்திருந்தனர்.
ஜடேஜா தன் முதல் ஓவரின் 2வது பந்தை நோ-பாலாக்கினார். அடுத்த ப்ஃரீ ஹிட் பந்தை ஜடேஜா வைடு ஆஃப் ஸ்டம்பில் வீச ஷாகிப் அல் ஹசன் பளார் என்று அறைந்து கவர் பவுண்டரிக்கு அனுப்பினார்.
அடுத்த பந்தையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து ஷாகிப் அல் ஹசன் ஸ்வீப் ஆட தினேஷ் கார்த்திக்கினால் அங்கு தடுக்க முடியவில்லை மீண்டும் பவுண்டரி. ஜடேஜாவின் 3 பந்துகளில் 9 ரன்கள்.
அப்போதுதான் தோனியின் கேப்டன்சி அனுபவம் இந்திய அணிக்கு, கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் கைகொடுத்தது.
2 பவுண்டரிக்குப் பிறகு ரோஹித் சர்மாவை அழைத்த தோனி பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் ஷிகர் தவணை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கினார். ஜடேஜாவிடம் இன்னும் சற்று வெளியே வீச அறிவுறுத்தினார் தோனி. கொஞ்சம் புல் லெந்த், மீண்டும் ஸ்வீப் ஆடினார் ஷாகிப் அல் ஹசன் அங்கு நேராக தவண் கையில் பந்து கேட்ச் ஆனது. பொறியில் சிக்கினார் ஷாகிப் அல் ஹசன், ஷாகிபின் ஈகோவை தோனி சோதித்தார், அவரும் பொறியில் சிக்கினார்.
அந்த நேரத்தில் இன்னொரு ஸ்வீப் ஷாட்டை ஷாகிப் ஆடியிருக்க கூடாது, ஆனால் ஷாகிப் அல் ஹசனின் ஈகோவை தோனி சோதிக்க அவரும் அதில் சிக்கினார். ஜடேஜாவும் அருமையாக கொஞ்சம் தள்ளி வீசினார்.
என்ன ஒரு அசாத்தியமான கணிப்பு தோனியிடம் என்று ரோஹித் சர்மா வியந்திருக்கலாம், ஜடேஜா வியந்திருக்கலாம், இதுதான் கேப்டன்சி அனுபவம் என்பதை தோனி நிரூபித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT