Published : 16 Aug 2018 09:02 AM
Last Updated : 16 Aug 2018 09:02 AM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம்:  குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷண் நம்பிக்கை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்துடன் நாடு திரும்புவேன் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷண் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டி:

2010-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கமும், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான் வெண்கலமும் வென்றேன். இதேபோல ஜகார்த்தாவில் நடை பெறும் போட்டியிலும் பதக்கம் வெல்வேன்.

நிச்சயம் பதக்கம் வென்று இந்தி யாவின் பெருமையை உயர்த்து வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹவா சிங், விஜேந்தர் சிங் போலவே நானும் வரலாற்றில் இடம்பெறுவேன். ஹவா சிங் 1966, 1970-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். அதேபோல மிடில்வெயிட் வீரர் விஜேந்தர் சிங் 2006-ல் வெண்கலமும், 2010-ம் ஆண்டில் தங்கம் வென்றார்.

நானும் அதுபோலவே தொடர்ந்து 2 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றுள் ளேன். இது எனக்கு 3-வது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். இதில் பதக்கம் வெல்வதற்காக கடும் பயிற்சி எடுத்துள்ளேன். சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினேன்.

இந்தப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளதால் எனக் கிருந்த அழுத்தம் குறைந்துள் ளது. தற்போது நான் மனதளவில் அமைதியாகவும், உற்சாகத்துட னும் உள்ளேன். நான் 100 சதவீத முழு உடல் தகுதியுடன் போட்டி யில் பங்கேற்கவுள்ளேன். பதக்கத் துடன் நாடு திரும்புவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x