Published : 16 Aug 2018 08:57 AM
Last Updated : 16 Aug 2018 08:57 AM
அடுத்த ஒலிம்பிக் சாம்பியன் களை நாம் உருவாக்க வேண்டும் என்று துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் விஜயநகரில் அமைந்துள்ள ஜேஎஸ்டபிள்யூ விளையாட்டு இன்ஸ்டிடியூட்டில் (ஐஐஎஸ்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அபிநவ் பிந்த்ரா பேசியதாவது:
நான் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றேன். இது பெரிய சாதனைதான். ஆனாலும் இந்த சாதனையை மட்டுமே நாம் நீண்ட நாட்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நான் நேற்றைய மனிதனாகிவிட்டேன். அடுத்த ஒலிம்பிக் சாம்பியன் யார் என்று நான் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஒலிம்பிக் சாம்பியன்களை நாம் உருவாக்கவேண்டும்.
கடந்த கால சாதனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு புதிய சாதனைகளைப் படைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். விளையாட்டுத் துறையில் நேற்று என்பது கணக்கில் வராது. எனவே புதிதாக என்ன சாதனை படைக்கப் போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இங்குள்ள விளையாட்டு இன்ஸ்டிடியூட்டில் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து வசதி களும் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சாம்பியன்கள் இங்கிருந் தும் உருவாக முடியும்.
நான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நாள் எனக்கு நல்ல நாளாக அமைந்தது. அதே நேரத்தில் நான் பல போட்டிகளில் தோல்வி கண்டிருக்கிறேன். அதுபற்றியும் பேசவேண்டும். ஒரு தடகள வீரரின் வாழ்க்கையில் தோல்விகள் வரலாம். ஆனால் தோல்விதான் வாழ்க்கை என்று நினைக்காமல், வெற்றி இலக்கை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.
விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியி லும், 2020-ம் ஆண்டு டோக்கியோ வில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை இலக்காக வைத்து இளைஞர்கள் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT