Published : 12 Aug 2018 06:46 PM
Last Updated : 12 Aug 2018 06:46 PM

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அதிரடி ஆட்டம்: திணறுகிறது இந்தியா

 

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி திணறி வருகிறது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளது இந்திய அணி.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகே சென்ற நிலையில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது.

இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. 2ம் நாள் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்த நிலையில், பேர்ட்ஸ்டோ- வோக்ஸ் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. பேர்ஸ்டோ 93 ரன்களில் ஆட்டமிழக்க, வோக்ஸ் நிலைத்து நின்று சதம் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் குரன் 22 ரன்களுடனும் ஆட்மிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வோக்ஸ், சாம் கரன் இருவரும் அதிரடியாக ஆடினர். சாம் குரன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. இத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சாம் கரன் 40 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் பெவிலியன் திரும்ப, 13 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x