Published : 07 Aug 2018 11:01 AM
Last Updated : 07 Aug 2018 11:01 AM
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி யின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக வட மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி தாழையூத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழை நடைபெற்ற ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போட் டியின்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த சிலர், ஒவ்வொரு ஓவரிலும் வீரர் கள் எத்தனை ரன்கள் அடிப்பார்கள் என்பது குறித்து பணம் வைத்து சூதாட்டம் நடத்தியுள்ளனர்.
சக பார்வையாளர்கள், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை பிடித்து, தாழையூத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முக மது அபில்(32), டெல்லியைச் சேர்ந்த மோசின்(42), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் ஜெயின்(26), ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் சர்மா(26), சுமித் டெட்டா(37), பெருல் லால்(27), சுபேர்(32), இஸ்லாம் (41), ஹரியானாவைச் சேர்ந்த கோரப்(26) எனத் தெரியவந்தது. இவர்கள் 9 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 13,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT