Published : 04 Aug 2018 07:37 PM
Last Updated : 04 Aug 2018 07:37 PM
பர்மிங்ஹாமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலனை வழியனுப்பி சென்ட் ஆப் செய்த இந்தியஅ ணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியஅணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.. அப்போது 2-வது இன்னிங்ஸில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலான் ஆட்டமிழந்தபோது, அவரை சென்ட் ஆப் செய்து வழியனுப்பி இசாந்த் சர்மா கிண்டல் செய்தார்.
இது தொடர்பாக களநடுவர்கள் அலீம் தார், கிறிஸ் ஜெபானி, மூன்றாவது நடுவர் மராயிஸ் எராஸ்மஸ் ஆகியோர் இசாந்த் சர்மா மீது புகார் தெரிவித்தனர். இது குறித்து ஐசிசி போட்டி நடுவர் ஜெப் கிரோவ் நடத்திய விசாரணையில் இசாந்த் சர்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மேல் விசாரணை ஏதும் நடக்காமல் தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஐசிசி வீரர்கள் நடத்தைவிதிப்படி, எதிரணி வீரர்களை நோக்கி, வார்த்தைகள், சைகைகள், உடல்மொழிகள் மூலம் கோபமூட்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது லெவல்-1ன்படி குற்றமாகும் நடத்தை விதிமுறை லெவல்-1 விதியை மீறி இசாந்த் சர்மா செயல்பட்டது உறுதியாகியது. அது குறித்து இசாந்த் சர்மாவிடம் ஐசிசி நடுவர் ஜெப் கிரோவ் விசாரித்த போது இசாந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதிக்கப்படுகிறது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT