Published : 24 Jul 2018 07:08 PM
Last Updated : 24 Jul 2018 07:08 PM

பாண்டிங் இந்தியாவில் ஒரு சதம்தான் எடுத்தார் ஆனாலும் அவர் லெஜண்ட், கவலையை விடுங்கள் கோலி: ஊக்கமளிக்கும் கம்பீர்

கடந்த இங்கிலாந்து தொடரில் பேட்டிங் சொதப்பல்களை கோலி நினைவில் கொள்ளாமல், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லாமல் ஆட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி பற்றி கூறும்போது, கோலியின் பார்ம் இந்தியாவுக்கு முக்கியம் எனவே தன் பார்ம் பற்றிக் கவலையில்லை இந்திய அணி வெற்றி பெற்றால் போதும் என்று கோலி கூறுவது ஒரு பம்மாத்து என்று கூறியதையடுத்து கம்பீர் கோலிக்கு ஊக்கமளிக்கும் விதமாகக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு கம்பீர் கூறும்போது, “இங்கிலாந்தில் ஆடிய கடந்த தொடரைப் பற்றி நினைத்து கோலி தன் மீதே கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர் ஏற்கெனவே உலகின் நடப்பு 3 சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவர்.

ரிக்கி பாண்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள் இந்தியாவில் அவர் ஒரேயொரு சர்வதேச சதத்தைத்தான் எடுத்துள்ளார். ஆனால் அவர் இன்னமும் லெஜண்ட்தான். ஆகவே ஒரேயொரு மோசமான தொடரை வைத்து யாரையும் எடைபோடக்கூடாது.

பல்வேறு நாடுகளில் கோலி ஏற்கெனவே தன் பேட்டிங்கை நிரூபித்துவிட்டார். ஆகவே இங்கிலாந்தில் நிரூபித்தேயாக வேண்டும் என்று அவர் தவறான சிந்தனைப்போக்கில் ஆடக்கூடாது” என்று கூறியுள்ளார் கம்பீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x