Published : 20 Jul 2018 05:50 PM
Last Updated : 20 Jul 2018 05:50 PM
என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் அதீத செயல்பாடு காரணமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். நெய்மர் வேண்டுமென்றே காயம் அடைந்து விட்டதாக நடித்து நேரத்தைக் கடத்துவதால், தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் பிற அணியினர் குற்றம் சுமத்தினர். நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் ட்விட்டரில் வீடியோக்களைப் பதிவிட்டனர்.
இந்த நிலையில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு நெய்மர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து நெய்மர் கூறுகையில், "என் மீதான விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் குறித்து நான் வருத்தப்படவில்லை. நான் அதை ஒரு நகைச்சுவையாகவே பார்க்கிறேன். நாம் எப்போதும் மகிழ்ச்சியைத் தேந்தெடுக்க வேண்டும். நாம் வருத்தமாக இருக்க காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT