Published : 17 Jul 2018 05:10 PM
Last Updated : 17 Jul 2018 05:10 PM
லீட்ஸில் நடந்து வரும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வென்று 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதனால், கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3-வது போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்பியுள்ளார். உமேஷ் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு இல்லாமல் காக்க வைக்கப்பட்டிருந்த தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய்க்கு கை விரலில் காயம் ஏற்பட்டு இருப்பதால், அவருக்கு பதிலாக வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஷிகர் தவண், தினேஷ் கார்த்திக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, சாஹல், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார். குல்தீப் யாதவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT