Published : 02 Jun 2018 07:32 AM
Last Updated : 02 Jun 2018 07:32 AM
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு சுருண்டது.
லீட்ஸ் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. தொடக்க வீரர்களான அசார் அலி 2, இமாம் உல்-ஹக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹரிஸ் சோகைல் 28, ஆசாத் ஷபிக் 27, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 14, உஸ்மான் சலாவுதின் 4, பாஹீம் அஸ்ரப் 0 ரன்களில் நடையை கட்டினர்.
79 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறி நிலையில் முகமது அமிர் உறுதுணையுடன் சதப்கான் சீராக ரன்கள் சேர்த்தார். இதனா ல் பாகிஸ்தான் 36-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. முகமது அமிர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹசன் அலி 24 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் வெளியேறினார். கடைசி வீரராக சதப்கான் 52 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்த நிலையில் டாம் குர்ரன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் 48.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT