Published : 04 May 2018 04:38 PM
Last Updated : 04 May 2018 04:38 PM

உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி

பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார்.

தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

“எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி விட்டது. இனி என் தரப்பிலிருந்து உங்கள் நம்பிக்கையைப் பெற நான் கடுமையாக உழைக்க வேண்டும்.

என்னுடைய இந்தக் கடினமான காலக்கட்டத்தில் என் தாய், தந்தை, மனைவி என்று எனக்கு பாறை போல் தைரியமாக, உறுதுணையாக நின்றனர். உங்களுக்கு என் நன்றிகள் போதாது.

உலகில் குடும்பம் மிக முக்கியமானது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x