Published : 04 May 2018 02:02 PM
Last Updated : 04 May 2018 02:02 PM

சிஎஸ்கே வீரர்களை அதிர்ச்சியடைய செய்த சிறுவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு இடையே நடந்த போட்டியில் சிறுவனின் செயல் சிஎஸ்கே வீரர்களை  அதிர்ச்சியடையச் செய்தது.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 33வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி அடித்த 177 ரன்களை, கொல்கத்தா அணி 18 ஓவரிலேயே எட்டி வெற்றியும் பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்யும் போது களத்துக்கு வெளியே சிஎஸ்கே வீரர்களிடம் கேப்டன் தோனி உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஓடி வந்த சிறுவன் ஒருவன் தோனியின் காலில் விழுந்தார்.

இதனை சற்று எதிர்பார்க்காத சிஎஸ்கேவின் பிற வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தோனியோ அந்த சிறுவனின் முதுகில் தட்டி கொடுத்து, முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் அமைதியாக நடந்து சென்று விட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x