Published : 04 May 2018 09:51 AM
Last Updated : 04 May 2018 09:51 AM

ஒருவரும் ஒழுங்காக வீசவில்லை, பீல்டிங்... எனக்குத் தெரியும்: தோல்வியினால் தோனி ஏமாற்றம்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இதில் வழக்கம் போல் சென்னை அணியின் பவுலிங் பிரச்சினைகளுடன் பீல்டிங் பிரச்சினைகளும் தலைதூக்கின, குறிப்பாக ஜடேஜா ஒரே ஓவரில் அடுத்தடுத்து சுனில் நரைனுக்கு விட்ட கேட்ச்களினால் நரைன் அதிரடி தொடக்கம் கண்டார்.

இதனையடுத்து ஆட்டம் முடிந்து தோனி கூறும்போது,  “எங்கள் பவுலர்களின் பலம்தான் என்ன என்பதைப் பார்த்துக் கணிக்க வேண்டும். பிட்ச் இரண்டாவது இன்னிங்ஸின் போது விளக்கு வெளிச்சத்தினால் கொஞ்சம் பேட்டிங்குக்குச் சாதகமானது, பவுலர்கள் இத்தகைய பிட்சில் வேகமான, வேகம் குறைந்த பந்துகளை வீசினாலும் பந்தின் தையல் தரையில் பட்டு எழும்பும்படி செய்ய வேண்டும்.

மொத்தத்தில் தொல்வி ஏமாற்றமளிக்கிறது. குறிப்பக பவுலிங் ஏமாற்றமளிக்கிறது. பீல்டிங்! நாங்கள் எப்படி பீல்ட் செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பீல்டர்கள் வினையாற்றுவதுதான் மோசமாக உள்ளது. 

மந்தமாக இருக்கும் போது இன்னும் கூடுதல் கவனத்துடன் பந்துகளை எதிர்பார்க்க வேண்டும், இந்த விழிப்புணர்வில் மைக் ஹஸ்ஸி எனக்கு முக்கியமானவராகத் தெரிகிறார். கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் அவர் எதிர்பார்த்து அதற்கேற்ப நகர்வார், அந்த நுட்பமும் அர்ப்பணிப்பும் தேவை என்று கருதுகிறேன்.

ஆனால் முதலிலிருந்தே எங்கள் பீல்டிங் எப்படியிருக்கும் என்பதை அறிந்தேயிருக்கிறோம். யாருமே ஒழுங்காக வீசவில்லை, அதனால்தான் இறுதி ஓவர்களின் போது பவுலர்களை மாற்றிக் கொண்டிருந்தேன். வீசும் வேகம், திசை பற்றி கொஞ்சம் பவுலர்கள் யோசித்து வீச வேண்டும்.

பேட்ஸ்மென்கள் இப்படி வீசினால் எங்கு அடிப்பார்கள் என்ற யோசனை வேண்டும். பேட்ஸ்மென்களின் வலு என்னவென்பதை பவுலர்கள்தான் கண்டறிய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x