Published : 30 Apr 2018 08:09 AM
Last Updated : 30 Apr 2018 08:09 AM
ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை சி.ஏ. பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஐஸ்லாந்தின் ரேக்ஜாவிக் நகரில் இப்போட்டிகள் நடைபெற்றன. நேற்ற நடைபெற்ற சப்ரே பிரிவு இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவியும், அமெரிக்காவின் அலெக்ஸில் பிரவுனும் மோதினர்.
இதில் அலெக்ஸில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதையடுத்து பவானிதேவிக்கு வெள்ளி கிடைத்தது. கால் இறுதியில் பவானிதேவி, பரேட் டாரஸையும், அரை இறுதியில் இத்தாலி வீராங்கனை குய்லா அர்பினோவையும் வீழ்த்தியிருந்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT