Published : 09 Apr 2018 05:40 PM
Last Updated : 09 Apr 2018 05:40 PM
அரசியல் தலைவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் காவிரிப் போராட்டத்தை திசை திருப்புகின்றன எனவே போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராட்டாக்காரர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவோம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள க்ரவுன் பிளாசா நட்சத்திர ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நாளை சேப்பாக்கத்தில் 20-20 போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT