Published : 20 Mar 2018 05:16 PM
Last Updated : 20 Mar 2018 05:16 PM
கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பிரமிப்பூட்டும் அதிரடியில் வங்கதேசக் கனவை முறியடித்த தினேஷ் கார்த்திக்கை முரளி விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடாதது குறித்து ட்விட்டர்வாசிகள் முரளி விஜயை சாடியுள்ளனர்.
வெற்றிக்குப் பிறகு முரளி விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில், “கவனிக்கத்தக்க தனித்துவ வெற்றி, என்ன வகையான கிரிக்கெட்டை நாம் ஆடிவருகிறோமோ அதனை மாதிரியாகக் கொண்டது” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் வெற்றிக்குக் காரணமான தினேஷ் கார்த்திக் பெயரைக் குறிப்பிடவில்லை.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பிறகு ‘சொந்தப் பிரச்சினை’ காரணமாக முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து ட்விட்டர்வாசிகளின் கருத்துகள் இதோ:
ஸ்ரீநாத்: “இதனை நீங்கள் முதன் முறையாகச் செய்யவில்லை விஜய். தமிழக அணி விஜய் ஹசாரே டிராபியை வென்ற போது கூட பயிற்சியாளரைப் பாராட்டி ட்வீட் செய்தீர்கள். அதில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு அபரிமிதமானது. சவுக்கடி விழும் என்று தெரிந்தே ஏன் இப்படி ட்வீட் செய்கிறீர்கள்? வளருங்கள் முரளி விஜய்”.
அஜய் வியாஸ்: டியர் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டுமென்று விரும்புகிறோம்.
விவேக் ராஜ் சிங்: ஹீரோவான தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை ஒரு நிமிடத்திற்கு மறந்து ஒரு மனிதராக எது சரியானதோ அதைச் செய்யுங்கள்.
கேஷவ் சவுத்ரி: தினேஷ் கார்த்திக் பெயரை குறிப்பிடாமல் இந்த ட்வீட் பூர்த்தியடையவில்லை. ஆகவே சொந்த விவகாரங்களைத் தள்ளி வையுங்கள், இது உங்கள் முட்டாள் தனத்தைக் காட்டுகிறது.
இவ்வாறு பலரும் முரளி விஜய்யை சாட ஒருவர், ‘தினேஷ் கார்த்திக் பெயர் குறிப்பிடாததற்கு தெரிந்த காரணங்கள் உள்ளன’ என்று பதிவிட்டுள்ளார். பலரும் ‘வளருங்கள் விஜய்’ என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT