Published : 03 Mar 2018 12:30 PM
Last Updated : 03 Mar 2018 12:30 PM
இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான பிர்லா குழுமத்தின் தற்போதைய தலைவர் குமார் மங்கலம் பிர்லா. இவரது மகனான ஆர்யமான் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக விளையாட இருக்கிறார்.
இதனை ராஜஸ்தான் ராயல் அணி உறுதி செய்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கு அர்யமான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
20 வயதான அர்யாமான் பிர்லா தனது 8 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2017 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிப் போட்டியில் தனது முதல் போட்டியில் மத்தியப் பிரதேச அணி சார்பில் அர்யமான் பிர்லா அறிமுகமாகி இருக்கிறார். 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்யமான 602 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இரு சதங்களும், 1 டபுள் சதமும் அடக்கம். மேலும் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவது குறித்து அர்யமான் பிர்லா கூறும்போது, ''ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று இருப்பது மிகுந்த கவுரவத்தை அளித்துள்ளது. இது எனக்கு சிறந்த வாய்ப்பு. நான் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறேன். நான் சவால்களை விரும்புகிறவன்'' என்றார்.
ஆல்ரவுண்டராக ராஜஸ்தான் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள அர்யமான் பிர்லா, ''எல்லோரையும் போல் எனக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக உழைப்பேன்'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT