Published : 13 Feb 2018 10:07 AM
Last Updated : 13 Feb 2018 10:07 AM

தோனியின் கீழ் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது: ஷேன் வாட்சன் கருத்து

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம் என்றும் கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியான விஷயம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வரலாற்று புகழை கொண்ட சிறந்த அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவது உண்மையிலேயே கவுரவமான விஷயம். மேலும் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளது எனது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரிய எதிரியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். ஆனால் அது நீண்ட காலத்துக்கு இல்லை. நான் இன்னும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பியே விளையாடுகிறேன், என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது எளிது.

ஆட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என தெரியாத இந்த விளையாட்டை இன்னும் நான் விரும்பியபடியும், சிறந்த போட்டியாளராகவும் உள்ளேன். அனைத்து ஆட்டங்களிலும் என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் நம்ப முடியாத வகையிலான சிறந்த அணிதான். தற்போதுள்ள அமைந்துள்ள அணியும், கடந்த ஆண்டுகளில் செயல்பட்ட அணியைவிட சிறப்பானதே.

இவ்வாறு ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

ஷேன் வாட்சன் 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இதன் பின்னர் கடந்த இரு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். 36 வயதான அவர், இதுவரை ஐபிஎல் தொடரில் 102 ஆட்டங்களில் விளையாடி 2,622 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.65 ஆகும். ஆல்ரவுண்டரான வாட்சன் 86 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர், ஓய்வுபெற்றிருந்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x