Published : 13 Feb 2018 10:07 AM
Last Updated : 13 Feb 2018 10:07 AM
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
பெங்களூரு அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்கள் உள்ளன. இதுவரை 15 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 11 வெற்றிகளை பதிவு செய்து 33 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 90 போட்டிகள் கொண்ட ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இதுவரை 71 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதனால் அடுத்த 3 வாரங்களில் நடைபெறும் ஆட்டங்கள் திருப்புமுனையாக அமையும் என கருதப்படுகிறது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அடுத்த 3 அணிகளுக்கான இடத்துக்கு புனே சிட்டி (28 புள்ளிகள்), ஜாம்ஷெட்பூர் எஃப்சி (25 புள்ளிகள்), சென்னையின் எஃப்சி (24 புள்ளிகள்), கேரளா பிளாஸ்டர்ஸ் (21 புள்ளிகள்), எஃப்சி கோவா (20 புள்ளிகள்) ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், அடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
அடுத்த போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வென்றாலும், புனே சிட்டி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதர 2 இடங்களை பிடிக்க ஜாம்ஷெட்பூர், கோவா, சென்னை, கேரளா அணிகள் இடையே அதிக போட்டி நிலவக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT