Published : 01 Feb 2018 04:53 PM
Last Updated : 01 Feb 2018 04:53 PM
டர்பனில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
பிட்ச் புதிய பந்தில் சற்றே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் என்றும் ஸ்பின்னர்களுக்கும் பந்து தரையில் பற்றி நின்று திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார், பந்தின் தையலைக் குறுக்குவாக்கில் பிடித்து வீசுவதும் அதிகம் இடம்பெற வாய்ப்புண்டு காரணம் பிட்ச் போகப்போக கொஞ்சம் மந்தமடைய வாய்ப்பு என்று பிட்ச் அறிக்கையில் ஷான் போலக் தெரிவித்தார்.
இதனால்தான் கோலியும் கூட டாஸ் வென்றிருந்தால் இலக்கை நிர்ணையிக்கவே முடிவு செய்திருப்போம் என்றார்.
தென் ஆப்பிரிக்க அணி: டிகாக், ஆம்லா, மார்க்ரம், டுபிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல், இம்ரான் தாஹிர்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே, தோனி, பாண்டியா, கேதார் ஜாதவ், புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT