Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM
தர்மசாலாவில் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இன்று மோதுகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திசாரா பெரேரா கூறியதாவது:
ஏஞ்சலோ மேத்யூஸ் இந்தத் தொடரில் பந்து வீசுவார். டெஸ்ட் தொடரில் அவர் பந்து வீசவில்லை. ஆனால் ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் பந்து வீச மேத்யூஸ் தயாராகி உள்ளார். இது அணி சமநிலை பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. மேத்யூஸ் எங்களுக்காக ஏதாவது சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி விராட் கோலி இல்லாமல் களமிறங்குகிறது. அவர், அந்த அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.
விராட் கோலி விளையாடாததால் தொடர் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. சிறந்த ஆட்டத்தை மேற்கொண்டால் இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும். இந்தத் தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். அணியும் சமநிலையுடன் உள்ளது. சிறப்பான முறையில் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிரோஷன் திக்வெலா, தனுஷ்கா குணதிலகா, உபுல் தரங்கா, மேத்யூஸ் ஆகியோர் பவர் ஹிட்டர்கள் தான். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்.
இவ்வாறு திசாரா பெரேரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT