Published : 13 Oct 2017 04:49 PM
Last Updated : 13 Oct 2017 04:49 PM
பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது:
பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது என்றே நான் நம்புகிறேன். பென்ஸ்டோக்ஸ் இல்லாமல் நாங்களே வெல்வோம்.
ஸ்டோக்ஸ் இல்லாததால் பிராட், ஆண்டர்சன் ஆகியோரது சுமை அதிகரிக்கும் மேலும் இவர்கள் இருவருக்கும் கொஞ்சம் வயதாகி விட்டது, 5 டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் தொடர்ச்சியாக ஆடிப் பார்த்ததில்லை.
ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை 3-1 என்று வெற்றி பெறும்.
பென் ஸ்டோக்ஸ் பொதுவெளியில் இப்படி நடந்து கொண்டது மிக மோசமானது. இது ஆட்டத்தின் மீது மோசமான ஒரு இமேஜை ஏற்படுத்தியுள்ளது.
அவரை உடனடியாக ஆஷஸ் தொடரிலிருந்து நீக்காமல் இங்கிலாந்து வாரியம் தவறிழைத்து விட்டது. ஆஸ்திரேலியாவாக இருந்தால் கதையே வேறு.
அணித்தேர்வாளர்கள் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தனர். அந்த அணியின் சிறந்த வீரர் ஸ்டோக்ஸ், எனவே அவர் இந்தத் தொடரில் ஆடாதது இங்கிலாந்துக்கு அவமானமே.
இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT