Published : 30 Dec 2016 10:25 AM
Last Updated : 30 Dec 2016 10:25 AM

வில்வித்தையில் வெள்ளி வென்ற ஸ்வேதா

இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசு சார்பில் 62-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டி, இந்தூரில் நடை பெற்றது.

இதில் 17 வயதுக்கு உட்பட் டோருக்கான வில்வித்தை போட்டியில் தமிழகத்தின் சார்பில் சென்னை குரோம்பேட்டை விவேகானந்தா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பல்லா வரம் அடுத்த அனகாபுத்துரைச் சேர்ந்த மாணவி மு.ஸ்வேதா பங்கேற்றார்.

அவர் 30 மீட்டர் பிரிவில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதுகுறித்து ஸ்வேதாவின் பயிற்சியாளர் வெங்கடேஷன் 'தி இந்து'விடம் கூறும்போது, “மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 62- வது தேசிய பள்ளிகளுக்கு இடை யிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வேதா 70, 60, 50, 30 மீட்டர் பிரிவில் பங்கேற்றார்.

இதில் 30 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது வரை தேசிய அளவில் பள்ளிகளி டையே நடந்த போட்டியில் தமிழகம் சார்பில் யாரும் பதக்கமும் பெறவில்லை. பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x