Published : 31 May 2016 09:51 AM
Last Updated : 31 May 2016 09:51 AM

வரலாறு படைத்த இந்திய வீரர்

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பீரித் சிங் சாந்து நார்வே நாட்டை சேர்ந்த ஸ்டெபக் எப்சி அணிக்காக நேற்று முன்தினம் விளையாடினார். ஐகே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்டெபக் அபார வெற்றி பெற்றது. 24 வயதான சாந்து கடந்த 2014-ம் ஆண்டே ஸ்டெபக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி முதல் இந்திய வீரர் என்ற வரலாறை படைத்தார் சாந்து.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x