Last Updated : 29 Nov, 2014 02:56 PM

 

Published : 29 Nov 2014 02:56 PM
Last Updated : 29 Nov 2014 02:56 PM

பிலிப் ஹியூஸ் மரணம்: கண்ணீரை அடக்க முடியாமல் உடைந்த கிளார்க்

பவுன்சர் தாக்கி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவினால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த பிலிப் ஹியூஸிற்கு மைக்கேல் கிளார்க் அஞ்சலி செலுத்தும் போது செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதுவிட்டார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மைக்கேல் கிளார்க், “ஒரு அணியாக நாங்கள் என்ன உணர்கிறோம் என்பது எளிதில் வார்த்தையாக வெளிப்படுத்த முடியாததாகும்” இதைக்கூறும் போது விசும்பத் தொடங்கினார் கிளார்க்.

கிரெக், வர்ஜினியா, ஜேசன், மீகன் உங்களுடைய அனைத்து வலியையும் துயரத்தையும் நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

தனது வீட்டில், பண்ணையில் தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் நேரங்கள் போக ஹியூஸ் எப்போதும் சக வீரர்களுடன் கிரிக்கெட் ஆடுவதையே பெரிதும் விரும்புவார்.

நாட்டிற்காக கிரிக்கெட் ஆடாமல் என்ன செய்வது? என்று பிலிப் ஹியூஸ் அடிக்கடி கூறுவது அவரது கிரிக்கெட் நேயத்தை எடுத்துரைக்கிறது.

அருமையான ஒரு வீரர், மற்றும் மனிதரை உலகம் இழந்து விட்டது. பிலிப் ஹியூஸ் குடும்பத்தினருக்கு உறுதி அளிக்கிறோம், அவரது நினைவை கவுரவிக்கும் விதமாக எங்களால் முடிந்ததை செய்வோம்.

பிலிப் ஹியூஸ் இல்லாமல் ஓய்வறை முன்பிருந்தது போல் ஒரு போதும் இருக்கப்போவதில்லை” என்றார் மைக்கேல் கிளார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x