Last Updated : 29 Nov, 2014 02:34 PM

 

Published : 29 Nov 2014 02:34 PM
Last Updated : 29 Nov 2014 02:34 PM

பிலிப் ஹியூஸ் துயரம்: முதல் டெஸ்ட் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு

மரணமடைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு புதன்கிழமை அவரது சொந்த ஊரில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு எதிரான டிச.4-ஆம் தேதி தொடங்கவிருந்த முதல் டெஸ்ட் போட்டி தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் வீரர்கள் பங்கேற்க டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு பிரிஸ்பனுக்கும் சிட்னிக்கும் இடையேயுள்ள மாக்ஸ்வில் என்ற ஊரில் நடைபெறுகிறது.

இந்திய கிர்க்கெட் வாரியமும், இந்திய வீரர்களும் இத்தகைய திடீர் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கு சானல் 9-ல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்திலும் லைவ் ஸ்ட்ரீமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x