Last Updated : 31 Jan, 2017 10:31 AM

 

Published : 31 Jan 2017 10:31 AM
Last Updated : 31 Jan 2017 10:31 AM

பார்வையற்றோர் கிரிக்கெட்டில் வெற்றி

பார்வையற்றோருக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பிரகாஷ் 96, கீட்டன் படேல் 98 ரன்கள் விளாசினர். 280 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்க தேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 129 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த நியூஸி லாந்து அணி 20 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது. எளிதான இலக் குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7.2 ஓவர்களிலேயே 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x