Last Updated : 30 Jan, 2017 10:31 AM

 

Published : 30 Jan 2017 10:31 AM
Last Updated : 30 Jan 2017 10:31 AM

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை இன்று தொடக்கம்

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் புதுடெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொள்கின்றன. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர் உட்பட 12 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ளது.

டெல்லியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்தியா ஆடவுள்ளது. இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x