Published : 16 Sep 2016 09:37 AM
Last Updated : 16 Sep 2016 09:37 AM
நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத் தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட னர்.
இந்நிலையில் நியூஸிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராஸ் டெய்லர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அணி மிகச்சிறந்த அணி. இந்திய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது மிகவும் கடினம். எங்கள் அணியைப் பொறுத்தவரை நாங்கள் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளோம். ஆனால் டெஸ்ட் தொடர்களை அதிகம் கைப்பற்றியதில்லை. இந்தத் தொடரில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது மிகவும் கடினம். இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த மோசமான தோல்வியைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். மோசமான ஆடுகளங்களால் அந்தப் போட்டிகள் குறுகிய காலத்தில் முடிந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்கிக் கொள்வதை நிறுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT