Published : 23 May 2015 10:43 AM
Last Updated : 23 May 2015 10:43 AM
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திரோ சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யுள்ளார். எஞ்சிய 6 பேர் அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக் கான பயிற்சி போட்டியான இதில் தேவேந்திரோ சிங்கை (49 கிலோ எடைப் பிரிவு) எதிர்த்து அரையிறுதியில் விளையாடவிருந்த கத்தார் வீரர் அல் ரபீக் உடற்தகுதியில்லை என அறிவிக்கப்பட்டார். இதனால் தேவேந்திரோ சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதுதவிர இந்தியாவின் சிவா தாபா (56 கிலோ), கவுரவ் பிதுரி (52 கிலோ), மன்தீப் ஜங்ரா (69 கிலோ), மணீஷ் குமார் (60 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ), விகாஸ் கிரிஷன் (75 கிலோ) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT