Last Updated : 20 Sep, 2015 12:40 PM

 

Published : 20 Sep 2015 12:40 PM
Last Updated : 20 Sep 2015 12:40 PM

தென் கொரிய ஓபன்: இறுதிச்சுற்றில் அஜய் ஜெயராம்

தென் கொரிய சூப்பர் சீரிஸ் பாட் மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடை பெற்ற அரையிறுதியில் அஜய் ஜெயராம் 21-19, 21-15 என்ற நேர் செட்களில் உலகின் 7-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஸவ் டியென் சென்னுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

இந்த சீசனில் இதற்கு முன்னர் சென்னிடம் இரு முறை தோல்வி கண்டிருந்த ஜெயராம், அரையிறுதி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றபோதிலும் விடாப்பிடியாக போராடிய ஜெயராம், இறுதியில் வெற்றி பெற்றார்.

ஜெயராம் தனது இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் சென் லாங்கை சந்திக்கி றார். இந்த சீசனில் மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு, ஸ்விஸ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு, ரஷ்ய ஓபன் கிராண்ட்ப்ரீ ஆகியவற்றில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த ஜெயராம், இப்போது தென் கொரிய ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யுள்ளார். இறுதிச்சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த சீசனில் சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x