Published : 30 Dec 2016 10:25 AM
Last Updated : 30 Dec 2016 10:25 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 488 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 488 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 286 ரன்களும், இலங்கை அணி 205 ரன்களும் எடுத்தன. 81 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 90.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 406 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஸ்டீபன் குக் 117, டீன் எல்கர் 52, ஆம்லா 48, டுமினி 25, டெம்பா பவுமா 8, குயிண்டன் டி காக் 69 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் டி சில்வா 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதைடுத்து 488 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி பேட் செய்தது.

75 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 43, சில்வா 48, பெரேரா 6, மெண்டிஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 44, சந்திமால் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 2 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x